Welcome!


அவன் வந்தான்:

3:18 PM Posted In Edit This 0 Comments »
ஆண்டவன் ஒருநாள் வந்துநின்றான்
ஆட்டம் கற்றுத்தர வந்தேன் என்றான்
ஆட்டங்கள் அறியாத என்னிடத்தே
அபிநயம் பிடித்துக் காட்டிநின்றான்

நிமிர்ந்து என்னை அமரச் சொன்னான்
நாடிமூச்சில் இணையச் சொன்னான்
கண்ணிரண்டும் மூடச் சொன்னான்
உள்ளுக்குள்ளே தேடச் சொன்னான்

கண்முன்னே கடவுள் என்றான்
தவறாய் நான் புரிந்திருந்தேன்
கண்திறந்து நானும் ஆமாமென்றேன்
ஐயகோ அவனும் நொந்துகொண்டான்

சொன்னபடியே செய்து பார்த்தேன்
மனதில் ஒருகணம் வந்து போனான்
இழுத்துப்பிடித்து தொடர்ந்திடவோ
இவனுக்கு ஏனோ முடியவில்லை

நினைக்கும் பொழுது அழைக்கச் சொன்னான்
வீட்டின் வழியும் சொல்லிப் போனான்
தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தால்
வானில் நிலவாய் சிரித்திருந்தான்

0 comments: