கைமணம்
7:16 PM Posted In நினைவுகள் Edit This 1 Comment »
புடைத்து புடைத்து
கல்பொறுக்க பயன்பட்ட முறமும்
தூக்கி வீசப்பட்டது
போன போகியுடன்
சோளங்குத்த ஆளில்லாத
உலக்கை
பரணுக்கு சென்றுவிட்டபின்
மூளியாய்க் கிடக்கிறது
உரல்
அடுக்களையில்
கரிபிடித்த
கடுகு டப்பாக்களை
இடம் பெயர்த்திருக்கிறது
பளபள கண்ணாடி குவளைகள்
அம்மாவின் கைமணம் மட்டும்
கருகிப்போய்விடவில்லை
என சொல்வதற்காய்
ஸ்டவ் அடுப்பில்
அடிக்கடி குளிர் காய்கிறது
அம்மா பத்திரமாய் பாதுகாக்கும்
பழைய மண்சட்டி
கல்பொறுக்க பயன்பட்ட முறமும்
தூக்கி வீசப்பட்டது
போன போகியுடன்
சோளங்குத்த ஆளில்லாத
உலக்கை
பரணுக்கு சென்றுவிட்டபின்
மூளியாய்க் கிடக்கிறது
உரல்
அடுக்களையில்
கரிபிடித்த
கடுகு டப்பாக்களை
இடம் பெயர்த்திருக்கிறது
பளபள கண்ணாடி குவளைகள்
அம்மாவின் கைமணம் மட்டும்
கருகிப்போய்விடவில்லை
என சொல்வதற்காய்
ஸ்டவ் அடுப்பில்
அடிக்கடி குளிர் காய்கிறது
அம்மா பத்திரமாய் பாதுகாக்கும்
பழைய மண்சட்டி
1 comments:
Dear kokul
your poem "kai Manam" is really super.It express our "Tamil Manam".
Proceed your thinking and "kirukkalkal".
Congratulations.
By
M.Ganapathi
Tuticorin
Post a Comment