Welcome!


வந்தாலும் வரலாம்

7:01 PM Posted In Edit This 1 Comment »
இந்த அமைதியான இரவில்
பிரிந்திருக்கிறோம் நாம்

சாரளத்தின் வழியே
நான் காண்கிண்ற இந்த நிலா
உனதறையில் தற்சமயம்
எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கும்

இங்கே திரைச்சீலை அசைக்கின்ற
இதே தென்றல் உனதறையின்
திரைச்சீலைகளிடத்தும்
அதிகாரம் கொண்டிருக்கும்

கண்கள் வெறுமனே
நட்சத்திரங்களை கண்டுகொண்டிருக்க
நினைவுகளில் என்னை
சுமந்தபடி இருக்கும் உன்னைப்போலவே
நானும்..

இரவும்
விடியலை நோக்கி பயணப்பட்டு
வெகுதூரம் வந்தாகிவிட்டது
இனியேனும்
நினைவுகளில் அசதியால்
கொஞ்சம் தூக்கம்
வந்தாலும் வரலாம்

1 comments:

இவன் said...

காதல் அழகானதொரு சுமைதான் கோகுலன்