Welcome!


வனாந்திரத்தின் நடுவே..

9:13 PM Edit This 9 Comments »






















நிலவின்றிக் கருத்த வானத்தின்
வெள்ளைப் பொத்தல்களில்
ஒழுகும் வெளிச்சங்கள்!
நள்ளிரவில் மாத்திரம்
விழித்துக்கொள்ளும்
நிசப்தத்தின் புதிய கூறுகள்!
அடர்மௌனத்தினை
மெதுவாய் சீண்டிப்பார்க்கும்
ஏரிக்கரையின் அலைச்சப்தம்!
அவ்வப்போது இருள்கிழித்து
படபடக்கும் சிறகுகள்
பழகிப்போன இருட்டு
விளக்கிலாத கூடாரம்
செருப்பில்லாத பாதங்கள்
இதயம் கீறிப்பார்க்கும்
நினைவின் நகங்களற்ற தனிமை
விடியற்பொழுதில்
மரக்கிளைகள் விலக்கி
சூரியக்கீற்றுகள்
முகத்தை வருடிய சமயம்
தொலைந்திருந்த நான்!