Welcome!


சாளரம்

6:03 AM Edit This 18 Comments »



















இந்தச்சாளரம்
இப்பேருலகின் உட்செல்ல
எனக்கான வாசலாயிருக்கிறது

மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்
நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்
இங்கிருந்தே என் கரங்களுக்கு
எட்டுவனவாய் இருக்கின்றன

சாரல் சிதறடித்தபடியோ
இளவெயிலின் புன்னகையுடனோ
என் அத்தியாவசிய முகங்கள்
இதன்வழியேதான்
எனதறைக்குள் பிரவேசிக்கின்றன

நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
வியாபாரத்திற்காய் விரைகின்ற
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது

சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு!

18 comments:

Anonymous said...

//சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு!//

நல்லா இருக்கு. :-))

MSK / Saravana said...

//சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு! //

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. மனதை பிரதிபலித்த கவிதை..

ஒவ்வொரு வரியிலும் என்னை காண முடிந்தது..

MSK / Saravana said...

மிக அருமை.. இன்னும் நிறைய எழுதுங்க..

Natchathraa said...

இந்தச்சாளரம்
இப்பேருலகின் உட்செல்ல
எனக்கான வாசலாயிருக்கிறது

உண்மைதான் தோழா....
மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்
*நட்சத்திரங்கள்* நிரம்பிய வானமும
இங்கிருந்தே என் கரங்களுக்கு
எட்டுவனவாய் இருக்கின்றன
:-))
//சாரல் சிதறடித்தபடியோ
இளவெயிலின் புன்னகையுடனோ//
என் அத்தியாவசிய முகங்கள்
இதன்வழியேதான்
எனதறைக்குள் பிரவேசிக்கின்றன
ஹம்ம்ம் சூப்பர் ரசனை....
நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
வியாபாரத்திற்காய் விரைகின்ற
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது
என்ன இருந்தாலும் ஜன்னலில் வேடிக்கை பார்க்குறது நல்லாவேயிருக்கும்...டைம் போரதே தெரியாது...
சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு!
ஹம்ம்ம்.....தனிமை சுகம் தான்.......
உங்களால மட்டும் எப்படி இவ்வளோ அழகா சொல்லமுடியுது....
வாழ்த்துகள் நண்பா.....

படத்தில் இருக்கும் இந்த சாளரம் உங்க ரூம் சாளரமா??? உங்களுக்கு புடிச்ச மஞ்சள் பூக்கள்...இளம் மஞ்சள் கர்டன்....:-)
ரொம்ப அழகாயிருக்கு இந்த புகைப்படம்....

அன்புடன்

நட்சத்திரா...

Vishnu... said...

சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு!

அருமையான
கவிதை நண்பரே ...

ஆறுதல் தரும் சில நேர தனிமைகள் ...

உங்கள் கவிதைகளில்
தனித்துவும் உணர்கிறேன் ..

தொடரட்டும் உங்கள்
கவி பயணம் ..
நானும்
தொடர்ந்து வர
ஆசையுடன் ...


இனிய தோழனாக
விஷ்ணு

Unknown said...

very fine keep it up

Boobalan

த.அகிலன் said...

//நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
வியாபாரத்திற்காய் விரைகின்ற
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது//

:) எனக்கிந்த வரிகள் பிடிச்சிருக்கு..

கோகுலன் said...

பின்னூட்டமிட்டு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்..

கோகுலன் said...

////நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
வியாபாரத்திற்காய் விரைகின்ற
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது//

:) எனக்கிந்த வரிகள் பிடிச்சிருக்கு..//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் அகிலன்..

கோகுலன் said...

//சாலையில் பரபரப்புகள் நிறையும்
பாரமான பொழுதுகளில்
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
தனித்துப்போதலும்கூட இங்கே
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு!

அருமையான
கவிதை நண்பரே ...

ஆறுதல் தரும் சில நேர தனிமைகள் ...

உங்கள் கவிதைகளில்
தனித்துவும் உணர்கிறேன் ..

தொடரட்டும் உங்கள்
கவி பயணம் ..
நானும்
தொடர்ந்து வர
ஆசையுடன் ...


இனிய தோழனாக
விஷ்ணு//

மிக்க நன்றிகள் விஷ்ணு..

உங்கள் தோழமையில் மிக்க மகிழ்ச்சி நண்பரே!

கோகுலன் said...

//என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. மனதை பிரதிபலித்த கவிதை..

ஒவ்வொரு வரியிலும் என்னை காண முடிந்தது..//

கருத்துக்கு மிக்க நன்றிகள் சரவணன்..

கோகுலன் said...

//என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. மனதை பிரதிபலித்த கவிதை..

ஒவ்வொரு வரியிலும் என்னை காண முடிந்தது..//

கருத்துக்கு மிக்க நன்றிகள் சரவணன்..

கோகுலன் said...

நன்றிகள் வீரசுந்தர்

கோகுலன் said...

நன்றிகள் வீரசுந்தர்

கோகுலன் said...

ஊக்கமிக்க பின்னூட்டத்திற்கு நன்றிகள் நட்சத்ரா!

கோகுலன் said...

ஊக்கமிக்க பின்னூட்டத்திற்கு நன்றிகள் நட்சத்ரா!

கோகுலன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ரத்னா!

கோகுலன் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ரத்னா!