Welcome!


மயானம்

3:31 PM Posted In Edit This 0 Comments »


எல்லாமே
தத்துவம்தான் இங்கு

புயலுக்குப் பின்னே அமைதியென
இயல்பாகவே
தத்துவம் சொல்லி நிற்கிறது
மயானம்

ஞானச் சாரளத்தின் வழி
பசியுடன் நிலவைத்தேடும்
சில பல மனிதர்களின்
பெளர்ணமி

பிரபஞ்சத்தின்
அமைதியும் அதிர்வும்
பூமித்தடாகத்தில்
முத்தமிடும் தடங்கள்

இங்குவந்தபின் கண்டவர் சிலர்..
வராமலும் கண்டவர் பலர்..
இங்கு எற்றப்பட்ட
ஒவ்வொரு முழுகுவர்த்தியும்
ஒருவனுக்கு ஞானப்பாதை
காட்டியது என்றாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை

முட்டிமோதி சிரித்து நடிக்கும்
தாகமான வாழ்க்கையின்
எதிர்ப்புறத்திலான ஒரு வாசல்
இங்குதான் எங்கேயோ
ஒளிந்து கொண்டிருக்கிறது..

பிறவி இருளை
கிழித்துக் காட்டுகிற
ஒரு மின்மினிப் பூச்சிகூட
இங்குதான் சுற்றிக்கொண்டிருக்கிறது
தவத்துடன்.

இறுதியாய்..
இங்கு வந்த ஒவ்வொருவனின்
இறுதிப் பயணத்திலும்
அவனுக்கு முன்
ஆட்டமாடி வந்தவனும்
தத்துவம் ஒன்றை
சொல்லிவிட்டுத் தான் போனான்.

'எங்கோ தொடங்கி
எஙகெங்கோ சுற்றிக்கொண்டு
மயானத்தில் முடித்துக்கொண்ட
ஆட்டத்தில்!'

0 comments: