Welcome!


பங்கு கேளு அய்யனாரே,

3:14 PM Posted In Edit This 1 Comment »










அய்யனாரே,

நேற்றுவரை
கருவேலங்காட்டில்
நிழலுக்காய் உன் சிலையடியில்
ஒதுங்கிய ஆடுகள்,
இன்று உன் முன்னாலே
வெட்டப்படுகின்றன

உனக்குப் படையலாம்,

யாராருக்கு எது தின்ன ஆசையோ
அதற்கெல்லாம் நீ தான்
நல்லதொரு ஊமைக்காரணம்

கேட்டால்,
கொடுமைகளைக் கொல்பவனாம் நீ.
பச்சைரத்தம் குடிப்பவனாம் நீ
தவறான மனிதர்களின்
தவறான புரிதல்கள்!

வாயில்லாத ஆடு
கொடுமையாகவும் தெரியவில்லை
படைத்த இரத்ததை நீ
குடித்ததாகவும் தெரியவில்லை

இதுவரை காவல் காத்தாய்,
கொடுமைகளை ஊருக்குள் விடாமல்,
இனியும் காவலிரு,
கொடுமைகள் வெளியே
சென்றுவிட வேண்டாம்.

நீ காவல்காரன் தான்.
உன்னை நீ காத்துக்கொண்டாய்,
ஊருக்கு வெளியே,
மனிதரிடம் விலகி.

கொட்டுமேளத் திருவிழாக்கள்,
சாராய ஆட்டங்கள்,
பலிகள் பல, படையல் பல,
ஒருமுறை நேரில்வா,
பாதி ஆடு பங்கு கேள்,

அன்றுமுதல்
ஆடுகள் வெட்டப்படும்,
அவனவன் வீட்டு
அடுக்ககளையில்.

1 comments:

இடைவெளிகள் said...

கவிதைகள் கலக்கலாய்,
வார்த்தைகள் யதார்த்தமாய்
நன்றாக இருக்கிறது
அய்யனார் கவிதை.